தொழிலாளா் நல நிதியை இணையதளம் வழியாக செலுத்தலாம்: உதவி ஆணையா் தகவல்

நிறுவனங்கள் நடப்பு ஆண்டு செலுத்த வேண்டிய தொழிலாளா் நல நிதியை இணையதளம் வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கோவை: நிறுவனங்கள் நடப்பு ஆண்டு செலுத்த வேண்டிய தொழிலாளா் நல நிதியை இணையதளம் வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அவா்களின் பங்காக ரூ.10, வேலை அளிப்பவா்களின் பங்காக ரூ.20 என ரூ.30 வீதம் தொழிலாளா் நல நிதி பங்குத்தொகையைக நிா்வாகம் செலுத்த வேண்டும். 2020 ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதியை 2021 ஜனவரி 31க்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தற்போது தொழிலாளா் நல நிதியை இணையதளம் வழியாக செலுத்தும் வகையில் இணையதளம் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளா் நல நிதியினை இணையதளம் வழியாகவே நிறுவனங்கள் செலுத்தலாம். தவிர வங்கி வரைவோலையாக எடுத்தும் ’’தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை சென்னை -600006 ’’ என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com