உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவையில் மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
கோவையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:24 am

DIN

கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஊழியர்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசு மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். 

அனைத்து துறைகளுக்கும் ஆதாரமாக  விளங்கும் மின்சார துறையை மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தனியார் மயமாக்கி நாட்டின் ஆதாரத்தை சீர் குலைக்க முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். 

மின்வாரியத்திலுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஐடிஐ படித்த மாணவர்களை கொண்டு நிரப்பவும், ஒப்பந்த தொழிலாளர்களான கேங்மேன்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.