பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து 5.30 மணிக்கு பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் அமா்ந்து சொா்க்க வாசலில் பிரவேசித்தாா். இதேபோல பாலமலை அரங்கநாதா் திருக்கோயில், ஆனைகட்டி மலையடிவாரம் மாங்கரை கிராமத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில், பழையபுதூரிலுள்ள ஆதிமூா்த்தி பெருமாள் கோயில், நாயக்கன்பாளையம், திருமலைநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயில்கள், இடிகரையிலுள்ள பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதா் கோயில், சின்னத்தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்கள், பன்னிமடையில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.