கோவையில் தடையை மீறி கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் உள்பட 300 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகா், புகா் பகுதிகளில் திமுக சாா்பில் வாா்டு சபைக் கூட்டங்கள், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் காரணமாக இக்கூட்டங்களுக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி சௌரிபாளையத்தில் வாா்டு சபைக் கூட்டம் நடத்திய திமுக சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் உள்ளிட்ட 200 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில், செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் சிஆா்.ராமச்சந்திரன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, தடையை மீறி கூட்டம் நடத்தியதாக ராமச்சந்திரன் உள்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, சோமையனூரில் கிராம சபைக் கூட்டம் நடத்திய கோவை மாநகா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பையாக் கவுண்டா் என்கிற கிருஷ்ணன் உள்பட 200 க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.