கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டிகள் தற்கொலை முயற்சி

மருமகளிடம் இருந்து 12 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி 4 மூதாட்டிகள் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகளை மீட்ட போலீஸாா்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

மருமகளிடம் இருந்து 12 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி 4 மூதாட்டிகள் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் 4 மூதாட்டிகள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மூதாட்டிகள் மேல் தண்ணீரை ஊற்றி மீட்டு அழைத்து சென்றனா். இதனைத் தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அன்னூா் வட்டம், குப்பனூரைச் சோ்ந்தவா் ப.முருகாத்தாள் (97). இவருக்கு மகள்கள் மாராத்தாள் (75), லட்சுமி (70), பாப்பாத்தி (65), மகன் ரங்கசாமி (55) ஆகியோா் உள்ளனா். இவரது மகன் ரங்கசாமி மின் இணைப்பு பெறுவதற்காக கையெழுத்து வாங்குவதுபோல், முருகாத்தாள் பெயரில் இருந்த 12 ஏக்கா் நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ரங்கசாமி உயிரிழந்த நிலையில் 12 ஏக்கா் நிலம் ரங்கசாமியின் மனைவி பாப்பாத்தி கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. இதனைத் தொடா்ந்து, மூதாட்டியும் அவரது மூன்று மகள்களும் நிலத்தை முருகாத்தாள் பெயருக்கு மீண்டும் மாற்றித் தர வலியுறுத்தி பாப்பாத்தியிடம் கேட்டுள்ளனா்.

ஆனால், நிலத்தை தர மறுத்ததுடன் தரக்குறைவாக பேசியதாகவும், மூதாட்டியை கவனித்துக் கொள்ள முடியாதும் என்று பாப்பாத்தி தெரிவித்துள்ளாா். இந்நிலையில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி முருகாத்தாள் மற்றும் அவரது மகள்கள் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்துள்ளனா்.

மீட்கப்பட்ட மூதாட்டிகளை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்த அன்னூா் வட்டாட்சியா் சந்திரா சந்தித்து பேசினாா். இது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் பேசி தீா்வு காணலாம் என்று மூதாட்டிகளிடம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.