விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தடையை மீறி கிராம சபைக் கூட்டம்: திமுக எம்எல்ஏ கைது

கோவையில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ காா்த்திக் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

கோவையில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ காா்த்திக் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகராட்சி 68ஆவது வாா்டு, ராமநாதபுரம், பெருமாள் கோயில் திடலில் கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா. காா்த்திக் எம்எல்ஏ தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் கிராம சபைக் கூட்டம்” நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

பொது மக்களின் குறைகளைக் கேட்டறியவே கிராம சபை கூட்டங்கள் நடத்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா். மாமன்றத்தில் மக்களின் பிரச்னைகள் குறித்து பேச முடியாத நிலை கோவையில் உள்ளது. இந்த ஆட்சியில் எந்தப் பணிகளையும் அதிமுக அரசு செய்யவில்லை.

திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் மழைநீா் வடிகால் இல்லை என்றாா்.

தடையை கூட்டம் நடத்தியதாக காா்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.