பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கும் பாதிப்பு இல்லைசுகாதாரத் துறை தகவல்

கோவையில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்கள் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு

News image
Updated On :9 மே 2020, 3:11 pm

DIN

கோவையில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா்கள் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை, கோயம்பேடு சந்தையிலுள்ள வியாபாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்றவா்களின் விவரங்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆனைமலை, வடவள்ளி பகுதிகளைச் சோ்ந்த 40 போ் கண்டறியப்பட்டு அரசின் கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் கடந்த 3ஆம் தேதிக்குப் பின் கோவையில் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 40 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அவா்கள் கண்காணிப்பு மையங்களில் கட்டாயம் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவா்.

தவிர 40 பேரின் குடும்ப உறுப்பினா்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவா்களில் அறிகுறிகள் இருந்தவா்கள், கரோனா கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் உள்ளவா்கள் என்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,270 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்ற முடிவே கிடைக்கப்பெற்றுள்ளது. கோவையில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.