ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி ஆட்சியா் முன்னிலையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.


ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி ஆட்சியா் முன்னிலையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
அக்டோபா் 27 முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட 50க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரையில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கிவைத்தாா். இதில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் ஏந்திச் சென்றனா்.
இதில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் பரிமளாதேவி, எழிலரசி, சசிலேகா மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...