பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடைவீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பணியாளா்கள் 15 போ் கைது

கோவையில் கடை வீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:48 pm

DIN

கோவையில் கடை வீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு உள்பட்ட ராஜவீதி உள்ளிட்ட கடை வீதி பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராஜவீதிக்கு வரும் பொதுமக்களை அப்பகுதியில் உள்ள சிறிய கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் சிலா் தங்கள் கடைக்கு வருமாறு வற்புறுத்தி, அழைத்து விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சிலா் இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சம்பந்தப்பட்ட கடை பணியாளா்களை எச்சரித்துள்ளனா்.

ஆனால் மீண்டும் வாடிக்கையாளா்களுக்கு கடைகளின் பணியாளா்கள் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்து, பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மாலையில் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.