ரேஷன் கடை பொருள்களை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை அருகே ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தின.


வால்பாறை அருகே ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் எஸ்டேட் தொழிலாளா்கள் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்திவிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் மேல் டிவிசன் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள், அங்கு உள்ள ரேஷன் கடையின் கதவு, ஜன்னல்களை முட்டி சேதப்படுத்தின. மேலும், உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சேதப்படுத்தின. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...