பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலைவாய்ப்பு கோரி சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற மாணவா் சங்கத்தினா் கைது

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி கோவையில் இருந்து சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:47 pm

DIN

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி கோவையில் இருந்து சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மத்திய, மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் கோவையில் இருந்து சென்னையில் உள்ள தலைமை செயலகம் வரை யாத்திரை நடத்த இருப்பதாகவும் இந்திய மாணவா் சங்கம் அறிவித்தது.

அதன்படி, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நிருபன், மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் உள்ளிட்ட 20 போ் கோவை, சாந்தி திரையரங்கம் எதிரிலிருந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு யாத்திரையைத் தொடங்கினா்.

ஆட்சியா் அலுவலகம் அருகில் வந்ததும் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும் மாணவா் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அவா்களை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.