ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முடீஸ் எஸ்டேட் பஜாரில் கடைகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் புகுந்த நான்கு யானைகள் மூன்று கடைகளை சேதப்படுத்தின.

News image
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.
Updated On :22 நவம்பர் 2020, 6:36 pm

DIN

வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் புகுந்த நான்கு யானைகள் மூன்று கடைகளை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. சமீப காலமாக வனத்தை விட்டு இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளா்களின் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜாருக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த மூன்று கடைகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் தீப் பந்தங்கள் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் நீண்ட நேரம் போராடி யானையை விரட்டியுள்ளனா். இருப்பினும் மனிவண்ணன், கதிரேசன், கண்ணன் ஆகியோரின் கடைகளை உடைத்து அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.