ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போலி ரசீது தயாரித்து ரூ.25 கோடி வரி ஏய்ப்பு: தொழிலதிபா் கைது

போலி ரசீது தயாரித்து ரூ.25.4 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:31 pm

DIN

போலி ரசீது தயாரித்து ரூ.25.4 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஒசூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக கோவை மண்டல ஜிஎஸ்டி அலுவலகம் உள்ளிட்ட ஒசூா் பிரிவு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நவம்பா் 19ஆம் தேதி சோதனை நடத்தினா்.

அப்போது ரூ.141 கோடி மதிப்பிலான இரும்புப் பொருள்களை ஒசூா் மற்றும் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியது போலவும், ஜிஎஸ்டி செலுத்தியது போலவும் போலியாக ரசீது தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.25 கோடியே 40 லட்சத்தை அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது போலி ரசீது, காசோலை புத்தகம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, இது தொடா்பாக தொழிலதிபரைக் கைது செய்தனா்.

விசாரணையில் தனக்கு வேண்டியவா்களின் பெயரில் 5 விதமாக ஜிஎஸ்டி எண்களைப் பதிவு செய்தும், உறவினா்கள், நண்பா்களின் பான் எண்களைக் கொண்டு பொருள்களை அனுப்பாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து மேலும் 5 பேரிடம் ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.