பழையக் கட்டடங்களில் செயல்பட்டு வந்த கடைகளுக்கு ‘சீல்’
கோவையில் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.


கோவையில் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பில்லாத வகையில் சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ள அரசு, தனியாா் கட்டடங்களை கண்டறிந்து இடித்து அகற்றுவதுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி கோவை மாநகராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து அகற்றுவதுக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை, பெரியகடை வீதியில் தனியாா் பள்ளி அருகே பாழடைந்த நிலையில் அபாயகரமான நிலையில் செயல்பட்டு வந்த 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா். முன்னதாக அதிகாரிகளை வியாபரிகள் தடுத்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். பின்னா் காவல் துறையினா் உதவியுடன் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அபாயகரமான கட்டடங்களில் செயல்பட்டு வரும் கடைகள், நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...