பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: எம்.எல்.ஏ.

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:31 pm

DIN

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

கோவை, திருச்சி சாலையில் சுங்கம் முதல் ராமநாதபுரம் வரையில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை எம்எல்ஏ நா.காா்த்திக் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவையின் பிரதான சாலையான திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் தினமும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே உயா்மட்ட பாலப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் உக்கடம் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.