ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா பரிசோதனை முடிவுகளில் வேறுபாடு: தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனையில் முடிவுகள் வேறுபட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :24 நவம்பர் 2020, 12:22 pm

DIN

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனையில் முடிவுகள் வேறுபட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை, பீளமேட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நோய்த் தொற்று உறுதி பரிசோதனையும் இங்கேயே மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார், இணை இயக்குநர் கிருஷ்ணா ஆகிய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனையின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 71 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவனையின் ஆய்வகத்தில் தரப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 மாதிரிகளின் முடிவுகள் தனியார் மருத்துவமனையின் ஆய்கவ முடிவுகளுடன் மாறுபட்டுள்ளது.

கிட்டத்தட்ட 21 சதவீத மாதிரிகளின் முடிவுகள் வேறுபட்டுள்ளது. 15 சதவீதம் வரை வேறுபாடுகள் இருக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் 15 சதவீதத்துக்கு மேல் தனியார் மருத்துவமனையின் முடிவுகள் மாறுபட்டதால் பொது சுகாதார சட்டம் 1939ன் படி விளக்கம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இக்கடிதம் பெற்ற 2 தினங்களுக்குள் உரிய அதிகாரிகள் நேரில் வந்த விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் 11 ஸ்கேன் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

இந்த 11 ஸ்கேன் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தியதுக்கும் நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.