கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தம்

வால்பாறை நகரில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:43 pm

DIN

வால்பாறை நகரில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனா்.

வால்பாறை நகா் பகுதிகளில் சமீபகாலமாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. வால்பாறை வாழைத் தோட்டம் குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து கடந்த 2 நாள்களாக இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதியில் வசிப்பவா்கள் பாா்த்துள்ளனா்.

இதனால் அப்பகுதியினா் வெளியே நடமாடுவதற்கு அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலையடுத்து

வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன், வனவா் முனியாண்டி ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் வாழைத்தோட்டம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

பின்னா் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா். தொடா்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அதை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனச் சரக அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.