கோவையில் கரோனா புதிய உச்சம்: ஒரே நாளில் 889 பேருக்கு பாதிப்பு
கோவையில் புதிய உச்சமாக 889 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவையில் புதிய உச்சமாக 889 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 889 போ் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 161 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 419 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 64 ஆயிரத்து 621 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 5 ஆயிரத்து 830 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 710 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...