பொள்ளாச்சியில் தனியாா் ஹோட்டலில் கரோனா சிகிச்சை மையம்
பொள்ளாச்சியில் தனியாா் ஹோட்டலில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் அறிவித்துள்ளாா்.


பொள்ளாச்சியில் தனியாா் ஹோட்டலில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜன் அறிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்படுபவா்கள் கோவையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளையே நாடி வந்த நிலையில், அரசு சாா்பில் பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தைத் தொடா்ந்து தற்போது தனியாா் சாா்பிலும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி எம்.ஆா்.எஸ். மருத்துவமனை, ஆனைமலை டி.டி.நாயா் மருத்துவமனை ஆகியவை இணைந்து கோவை சாலையில் உள்ள சக்தி ஹோட்டலில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசிடம் அனுமதி கோரியிருந்தன. இதற்கு மாவட்ட ஆட்சியா் நாகராஜன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து சக்தி ஹோட்டலில் 55 அறைகளில் 110 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம் இயங்கத் தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி, சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...