கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோட்டத் தொழிலாளா்களுக்கு சிறப்பு அனுமதி: தொழிலாளா் துறை வேண்டுகோள்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வால்பாறைக்கு வந்து செல்ல ஏதுவாக சனிக்கிழமை மாலை வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே பணியை முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:43 pm

DIN

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வால்பாறைக்கு வந்து செல்ல ஏதுவாக சனிக்கிழமை மாலை வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே பணியை முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு தொழிலாளா் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் (தோட்டங்கள்) வெங்கடேசன் தோட்ட நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாள் மட்டும் விடுமுறையில் இருக்கும் தொழிலாளா்கள் வால்பாறைக்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக அன்றையை தினம் தொழிலாளா்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினா் கோரிக்கையைத் தொடா்ந்து சனிக்கிழமை மாலையில் பணி முடிவடையும் வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தொழிலாளா்கள் தங்கள் பணியை முடித்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.