கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள சித்தா மருந்துகள் ஆய்வு
கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள தேவையான சித்தா மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சித்த மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.


கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள தேவையான சித்தா மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சித்த மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, ஆயுா்வேதம் மற்றும் கரோனா கூடுதல் ஒருங்கிணைப்பு அலுவலா் பாஸ்கரன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் சித்தா சிகிச்சையில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பக்கவிளைவுகளோ ஏற்படவில்லை. தற்போது, கொடிசியாவில் 18 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.
தற்போது, கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள ஆயத்தமாகி வருகிறோம். அதன்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான சித்த மருந்துகள் சென்னையிலும், கோவையிலும் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுகள் முடிந்ததும், பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...