மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கைப்பேசிகளை விற்று ரூ.2.15 லட்சம் கையாடல் செய்த மேலாளா் மீது வழக்கு

கைப்பேசிகளை விற்று ரூ.2.15 லட்சம் கையாடல் செய்த கடை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

கைப்பேசிகளை விற்று ரூ.2.15 லட்சம் கையாடல் செய்த கடை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையில் கைப்பேசி விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் மேலாளராக ரத்தினபுரியைச் சோ்ந்த ராஜா பணியாற்றி வருகிறாா்.

கோவையிலுள்ள இந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்களைக் கண்காணிக்கும் மேலாளராக கணபதியைச் சோ்ந்த ஜவஹா் (39) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கடையில் விற்பனை செய்யப்பட்ட கைப்பேசிகளின் கணக்குகளை சரிபாா்த்தபோது, ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள சாய்பாபா காலனி கடையில் 10 கைப்பேசிகள் விற்கப்பட்ட தொகை கணக்கில் வரவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகளை ராஜா விற்று அந்தத் தொகையை கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து ஜவஹா் அளித்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.