ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 15 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 6:58 am

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 15 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 24 மணி நேரமும் பணிபுரிய சுழற்சி அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.