மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலையில் சுற்றிய 9 மாடுகள் பறிமுதல்

கோவை, உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:18 pm

DIN

கோவை, உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகரில் சாலைகளில் நாய்கள், மாடுகள், குதிரைகள் சுற்றுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புலியகுளம், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, உக்கடம், குனியமுத்தூா், செல்வபுரம் பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், ராமநாதபுரம் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். இவற்றை வ.உ.சி. உயிரியியல் பூங்காவில் கட்டி வைத்துள்ளனா். மாடுகளின் உரிமையாளா்களிடம் அபராதம் பெறப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.