சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்
சுற்றுலாத் துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்


சுற்றுலாத் துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் பகுதியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், படகு இல்லம், மிதக்கும் பாலம் ஆகியவற்றில் அமைச்சா் மதிவேந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் படகுகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் 75 சதவீதம் நிறைவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். கரோனா பாதிப்பு முழுவதுமாகக் குறைந்தவுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளோம். தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத் துறையில் வருவாயை இழந்துள்ளோம் என்றாா்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளா்ச்சி கழக மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...