மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பணம் மோசடி: முன்னாள் ராணுவ வீரா் கைது

கோவை காட்டூா் அருகே பணம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

கோவை காட்டூா் அருகே பணம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை காட்டூா் காலிங்கராயன் வீதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (32). இவா் அதே பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (33) என்பவா் ராணுவ உடையில் அடிக்கடி தேநீா்க் கடைக்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்கு எனக் கூறி அண்ணாதுரையிடம், ஈஸ்வரன் ரூ.8 ஆயிரம் பணம் வாங்கியுள்ளாா். அதன் பிறகு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக காட்டூா் காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஈஸ்வரனிடம் நடத்திய விசாரணையில், அவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.