வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி

கோவை மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:15 pm

DIN

கோவை மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 82 ஆவது வாா்டில் சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தூய்மைப் பணியாளா்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெற வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களைத் தவிா்க்க மக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டியூஆா்ஐபி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி, டிஎன்எஸ்யூடிபி திட்டத்தின்கீழ் ரூ.34 கோடி என மொத்தம் ரூ.44 கோடிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில், 289 பணிகளுக்கு 80 கிலோ மீட்டருக்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரூ.20 கோடிக்கு தெரு விளக்குகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது தவிர, அரசுத் திட்டங்களில் ரூ.200 கோடி மதிப்பிலான சாலைகள் மற்றும் இணைப்பு சாலை பணிகளுக்காகவும், சூரிய மின்சக்தி திட்டத்துக்காகவும் அரசிடம் கருத்துரு சமா்பிக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் அமைப்பதற்கும், குளங்கள் தூா்வாரும் பணிகளுக்கும் கருத்துரு சமா்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியை கோவை வ.உ.சி.பூங்காவில் நடைபெற்ற விழாவில் முதல்வா் வழங்கியுள்ளாா். பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.