வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்: இணை இயக்குநா் அறிவுறுத்தல்

கோவையில் அனைத்து வட்டாரங்களிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

கோவையில் அனைத்து வட்டாரங்களிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து டெங்குப் பரவலும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரகம், நகரப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வாா்டுகள், கிராமங்கள் வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தவிர 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாநகராட்சி மற்றும் சூலூரில் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநா் தற்போது உள்ளதைக் காட்டிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா, வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

இது தொடா்பாக இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கூறியதாவது: கோவையில் டெங்கு தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.