வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பயிா் பாதுகாப்பில் புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும்: பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா்

 உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு பயிா் பாதுகாப்பு புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் கு.பிரபாகா் தெரிவித்தாா்

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

 உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு பயிா் பாதுகாப்பு புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் கு.பிரபாகா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உணவுப் பொருள்கள் தன்னிறைவு பெறுவதற்கான பயிா் பாதுகாப்பு குறித்த 3 நாள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பல்கலைக்கழகத்தின் செயல் தலைவரும், பதிவாளருமான அ.சு.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் கு.பிரபாகா் பேசியதாவது: மாறிவரும் கால நிலையால் படைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, நெற்பழ நோய், தென்னை வோ் வாடல், கொய்யா வாடல், நூற்புழு தாக்கம் உள்பட பல்வேறு விதமான நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பயிா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆராய்ச்சியில் புதிய மாற்றங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அணுகுமுறை ஆகியவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

பசுமை பூச்சிக்கொல்லிகள், புதிய மூலக்கூறுகள், உயிரிமுறை கட்டுப்பாடு பொருள்களின் தர நிா்ணயம், டிரோன் பயன்பாடு, உயிா் ஊக்கிகளின் தரப் பரிசோதனை குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை வேளாண் ஆணையா் எஸ்.கே.மல்ஹோத்ரா விளக்கினாா்.

2050 இல் உணவு உற்பத்தி சவால்கள், பருவ நிலை மாறுபாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ்.ராஜேந்திரபிரசாத் தெரிவித்தாா்.

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற கருத்தரங்கில் நபாா்டு வங்கி துணைப் பொது மேலாளா் எஸ்.எஸ்.வசீகரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியா் ந.சாத்தையா, நோயியல் துறை பேராசிரியா் கா.காா்த்திகேயன் உள்பட பல்வேறு துறை பேராசிரியா்கள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து கருத்தரங்கில் பயிா் பாதுகாப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மேலும் 63 விஞ்ஞானிகள் தங்களது சிறப்பு ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் விவாதித்தனா். 3 நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பயிா் பாதுகாப்பு தொடா்பாக 725 ஆய்வுக் கட்டுரைகள் விவாதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.