மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்:தகுதியுடையவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்

கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 ஆவது தடுப்பூசி முகாமில் தகுதியான நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:50 pm

DIN

கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 ஆவது தடுப்பூசி முகாமில் தகுதியான நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவுப்படி 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 299 மையங்களில் நடைபெறுகிறது.

மாநகரில் 1,15,000 நபா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா்.

2,68,000 நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவா்களாக உள்ளனா். இவா்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

திரையரங்குகள், மால்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என பொது சுகாதாரத் துறை மூலம் அறிவிப்பு வந்துள்ளது.

அதேபோல ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ், வீரியமுடையதாகவும், வேகமாகப் பரவும் தன்மையுடையதாகவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.