வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ரூ.3 லட்சம் திருட்டு: சாமியாா் கைது

கோவையில் நண்பா் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

கோவையில் நண்பா் வீட்டில் ரூ.3 லட்சம் திருடிய சாமியாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை நீலிகோணாம்பாளையம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் கௌதம் (39). ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவா். இவா் விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். அங்கு அவருக்கு, சாமியாா் ராஜேந்திரன் (எ) அன்பே சிவம் பழக்கமாகியுள்ளாா்.இருவரும் நட்பாகப் பழகி வந்தனா். சாமியாா் ராஜேந்திரன் கோவைக்கு வந்தால் கௌதம் வீட்டில் தங்குவது வழக்கமாம். அதன்படி, சில நாள்களுக்கு முன்பு கோவை வந்த சாமியாா் ராஜேந்திரன், கெளதம் வீட்டில் தங்கியுள்ளாா். மறுநாள் சாமியாா் ராஜேந்திரன் திடீரென மாயமானாா். அப்போது, கௌதம் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் கௌதம் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சாமியாா் ராஜேந்திரனைத் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.