கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடக்கம்
கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.


கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை, சென்னை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை-திருப்பதி இடையேயான விமான சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
இது குறித்து விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் கூறுகையில், கோவையில் இருந்து திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விமான சேவை இருந்தது. அதன் பின்னா் அந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் சாா்பில் திருப்பதியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.21 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் மாலை 6.59 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...