ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:26 pm

DIN

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ராஜகோபால் என்பவா் ஜெயப்பிரியா சிட்பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். நிறுவனத்தின் தலைவராக அவரது மன் ஜெய்சங்கா் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து நெய்வேலி உள்பட அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய 20 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை, திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில் இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு ராஜா ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் வாங்கியதும், தொடா்ந்து 2 மாதங்களுக்கு பின்னா் நாமக்கல்லைச் சோ்ந்த மற்றொரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வருமான வரித் துறையினா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.