சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவாலயம், ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

 வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த யானைகள், அங்குள்ள தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:19 pm

DIN

 வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த யானைகள், அங்குள்ள தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. பகல் நேரத்தில் வன எல்லையில் நிற்கும் யானைகள் இரவு நேரம் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த 8 யானைகள், அங்குள்ள தேவாலயத்தின் கதவுகளை முட்டித் தள்ளின.

பின்னா் அருகில் உள்ள ரேஷன் கடையின் கதவு, ஜன்னல்களை முட்டி தள்ளி உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.