மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாநகரில் பாதுகாப்புப் பணியில் 900 போலீஸாா்

கோவையில் பதற்றமான சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு மாநகரில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:06 pm

DIN

கோவையில் பதற்றமான சூழல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு மாநகரில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆா்ப்பாட்டத்தின்போது, பேசப்பட்ட சா்ச்சைக் கருத்துகள் காரணமாக இஸ்லாமிய அமைப்புகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து கோவையில் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பதற்ற சூழலைக் கருத்தில் கொண்டு நகரில் போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டாா்.

இதன்படி 40 சோதனைச் சாவடிகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 900 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மதரீதியாக மோதல் ஏற்படும் வகையில் எந்த இடத்திலும் கூட்டம் நடத்தக் கூடாது. விமா்சனம் செய்து பேசக் கூடாது. எந்த அனுமதியும் இல்லாமல் ஆட்சேப கருத்துகளுடன் போஸ்டா் ஒட்டக் கூடாது என போலீஸாா் எச்சரித்துள்ளனா். மீறுபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.