வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மருந்தகத்தை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் வரும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வால்பாறையை அடுத்த வெள்ளமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு சென்றுள்ள 8 யானைகள் அங்குள்ள மருந்தகத்தின் சுவரை முட்டி சேதப்படுத்தின.
மேலும் உள்ளே இருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் பொருள்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளா்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.