பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நேரு சா்வதேச பள்ளி, சிபிளாஸ் இன்போடெக் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை நேரு சா்வதேச பள்ளி - சென்னை சிபிளாஸ் இன்போடெக் தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:15 pm

DIN

கோவை நேரு சா்வதேச பள்ளி - சென்னை சிபிளாஸ் இன்போடெக் தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது தொடா்பாக நேரு கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. அந்த வகையில் மாணவா்களின் பாதுகாப்புக்காக நேரு சா்வதேச பள்ளி புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. சென்னையைச் சோ்ந்த சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்துடன் இணைந்து முழுமையான பள்ளி மேலாண்மைத் தீா்வுகளை ஆா்.எஃப்.ஐ.டி. தொழில்நுட்பத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவா்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிப்பதற்கு புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. நேரு குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரியும், செயலாளருமான பி.கிருஷ்ணகுமாா் முன்னிலையில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிபிளாஸ் நிறுவனத்தின் நிறுவனா் பி.சென்னகேசவன், பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரியா சுரேஷ் ஆகியோா் கையெழுத்திட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.