பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் 

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

News image
பெரியபாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.
Updated On :4 ஜனவரி 2021, 9:26 am

DIN

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. உணவுப்பொருட்கள், சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 
இந்த கிடங்கில் அடிப்படை உரிமைகள் கேட்கும் தொழிலாளர்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் இதனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தியபடி 61 நிரந்தர தொழிலாளர்கள், 68 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காமல் மறுக்கப்பட்டு வந்துள்ளது. 
இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி இந்த தொழிற்சாலையின் எதிரில் சிஐடியு சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.