தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:30 pm

DIN

சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது.

கோவை மாநகா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 878.85 மீட்டா் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பருவமழைக் காலம் முடிந்த பிறகு சிறுவாணி அணை நீா்மட்டமானது, தினமும் 3 செ.மீ. வரை சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் இடைவெளிவிட்டு பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழையும், அடிவாரப் பகுதிகளில் 20 மில்லி மீட்டா் மழையும் பதிவானது. கடந்த வாரங்களில் 874 மீட்டராக இருந்த அணை நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.