வேளாண் சட்டங்கள்: சிஐடியூ தொழிற்சங்கத்தினா் மறியல்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோவையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
கோவையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் 40 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கோவை ஆட்சியா் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன் தலைமையில் மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஆா்.வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே இருந்து ஊா்வலமாக வந்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com