கரோனாவால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு நிதி உதவி
கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராகப் பணியாற்றியவா் தங்க இசக்கி. இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 25ஆம் தேதி அன்று உயிரிழந்தாா்.
இந்நிலையில் தங்க இசக்கியுடன் பணிபுரிந்த காவலா்கள், அவரது பெற்றோருக்கு உதவ முடிவு செய்தனா். இதையடுத்து கோவை மாவட்ட ஆயுதப்படை காவலா்கள், கோவை மாவட்ட தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்கள் இணைந்து காவலா்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள ‘உதவும் கரங்கள்’ என்ற கட்செவி அஞ்சல் குழு மூலம் ரூ.1.60 லட்சம் நிதி திரட்டினா்.
இந்தத் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, தங்க இசக்கியின் பெற்றோா் முத்துராஜ், செந்தூரகனி ஆகியோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா். நிதியைப் பெற்றுக்கொண்ட அவா்கள் காவலா்களுக்கு கண்ணீா் மல்க நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...