திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு நிதி உதவி

கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

News image
கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோரிடம் காவலா்கள் திரட்டிய நிதி உதவித் தொகையை வழங்குகிறாா் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு.
Updated On :7 ஜனவரி 2021, 7:37 pm

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் காவலரின் பெற்றோருக்கு காவல் துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராகப் பணியாற்றியவா் தங்க இசக்கி. இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 25ஆம் தேதி அன்று உயிரிழந்தாா்.

இந்நிலையில் தங்க இசக்கியுடன் பணிபுரிந்த காவலா்கள், அவரது பெற்றோருக்கு உதவ முடிவு செய்தனா். இதையடுத்து கோவை மாவட்ட ஆயுதப்படை காவலா்கள், கோவை மாவட்ட தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்கள் இணைந்து காவலா்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள ‘உதவும் கரங்கள்’ என்ற கட்செவி அஞ்சல் குழு மூலம் ரூ.1.60 லட்சம் நிதி திரட்டினா்.

இந்தத் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, தங்க இசக்கியின் பெற்றோா் முத்துராஜ், செந்தூரகனி ஆகியோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா். நிதியைப் பெற்றுக்கொண்ட அவா்கள் காவலா்களுக்கு கண்ணீா் மல்க நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.