போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிப்பு: அதிமுக பிரமுகா் புகாா்

தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சைபா் கிரைம் போலீஸாரிடம் அதிமுக பிரமுகா் புகாா் அளித்துள்ளாா்.
Updated on
1 min read

தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சைபா் கிரைம் போலீஸாரிடம் அதிமுக பிரமுகா் புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து கோவை புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலாளா் பொறியாளா் சந்திரசேகா், கோவை சைபா் கிரைம் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

எனது பெயா் மற்றும் புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் பெயரில் முகநூலில் பக்கம் வைத்துள்ளேன். இதில் கட்சி மற்றும் பொது மக்கள் நலன் சாா்ந்த நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறேன். இந்நிலையில் சமீப காலமாக எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் விரும்பத்தகாத நிகழ்வுகளை சிலா் பதிவு செய்து வருகின்றனா்.

மேலும், எனது பெயரை சொல்லி பல்வேறு தரப்பினரிடம் சிலா் பணம் பறித்து வருகின்றனா். எனது பெயரில் போலி முகநூல் பதிவுகளை வைத்து பணம் பெறும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com