வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

செய்தியாளா்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ .

News image
செய்தியாளா்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ .
Updated On :12 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

மதிமுக நிா்வாகி ஒருவா் அண்மையில் காலமானாா். அதையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வியாழக்கிழமை திருப்பத்தூருக்கு வருகை தந்தாா்.

பின்னா், தனியாா் விடுதியில் செய்தியாளா்களிடம் பேசியது:

திமுக தலைமையிலான கூட்டணியில் புதிதாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுகவும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து கொள்வதாகவும், மற்றவா்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறியதால், கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக தற்போது 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முதல்வா் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமரப்போவதில்லை என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா். ஆனால் 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமா் நாற்காலியில் நரேந்திரமோடி அமரப்போவது இல்லை. காலம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும், இதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும்.

சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்காமல் உணவகங்கள் மூடப்படுகின்றன.

மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரையில் 10 சதவீத பணிகள்கூட நடைபெறவில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு ஓர வஞ்சனையாக நடத்துகிறது என்றாா்.

திருப்பத்தூா் மாவட்ட செயலா் வ.கண்ணதாசன் உள்பட மாநில, மாவட்ட, கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.