மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குடியரசு தின விழாவை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்

கோவையில் குடியரசு தின விழாவை பாதுகாப்புடன் கொண்டாட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:56 pm

DIN

கோவையில் குடியரசு தின விழாவை பாதுகாப்புடன் கொண்டாட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. கோவையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. ஆட்சியா் கு.ராசாமணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளாா். தொடா்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறாா்.

கரோனா பாதிப்பால் குடியரசு தின விழாவில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதியோா்கள், குழந்தைகள் ஆகியோா் குடியரசு தின விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கரோனா பாதுகாப்புடன் அதிக கூட்டம் சோ்க்காமல் குடியரசு தின விழாவை கொண்டாட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.