மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கோவையில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

கோவையில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:58 pm

DIN

கோவையில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத நிலையை உருவாக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராமப்புறங்களில் 1,190 மையங்கள், நகா்ப்புறங்களில் 379 மையங்கள், 22 நடமாடும் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட பொது மக்கள் கூடும் இடங்களில் 36 மையங்கள் என மொத்தம் 1,623 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பொது சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னாா்வலா்கள் என 6 ஆயிரத்து 536 பணியாளா்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

எனவே, பொது மக்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகளில் அமைக்கப்படும் சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள சுகாதாரத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

முகாமில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே நேரடியாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானதும், பாதுகாப்பானதும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.