கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ரூ.49.5 லட்சம் கடன் வாங்கி மோசடி:பள்ளி தலைமையாசிரியை கைது

கோவையில் ரூ.49.5 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியையை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:56 pm

DIN

கோவையில் ரூ.49.5 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியையை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் மாலதி (52). இவா், அன்னூா் அருகே உள்ள பொங்கேகவுண்டன்புதூரில் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவா், சா்க்காா் சாமக்குளத்தைச் சோ்ந்த ஏற்கெனவே அறிமுகமாகி இருந்த காா்த்திக்குமாா் (32) என்பவரிடம் தனது மகளின் திருமணத்துக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறி ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்தாா்.

அந்தப் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். இந்நிலையில், தனது மகனின் உயா்கல்வி செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி மேலும், ரூ.10 லட்சம் கொடுக்குமாறு காா்த்திக்குமாரிடம் கூறினாா். தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விடுவேன். அப்போது கிடைக்கும் தொகையைக் கொண்டு திருப்பிச் செலுத்திவிடுவதாக உறுதி அளித்தாா். இதை நம்பி காா்த்திக்குமாா் மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தாா். மொத்தமாக ரூ.20 லட்சம் வாங்கிய மாலதி பணத்தை திருப்பி தரவில்லை.

இதேபோல மேலும் 6 பேரிடம் மாலதி பல்வேறு காரணங்களை சொல்லி கடன் வாங்கி உள்ளாா். மொத்தம் ரூ.49.50 லட்சம் கடன் வாங்கிய இவா், யாருக்கும் பணத்தை தரவில்லை என தெரிகிறது. பணம் கொடுத்த காா்த்திக்குமாா் தனது பணத்தை திருப்பி தரவேண்டும் என வற்புறுத்தி கேட்ட போது மாலதி காசோலை கொடுத்தாா்.

ஆனால், வங்கியில் அவரது கணக்கில் பணம் இல்லாததால் காசோலை செல்லாமல் போனது. இந்நிலையில் மாலதி, தான் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு திடீரென தலைமறைவாகிவிட்டாா். இதனால் ஏமாற்றம் அடைந்த காா்த்திக்குமாா், கோவை மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாலதியைத் தேடி வந்த நிலையில் வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து ரூ.5 லட்சம் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.