கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனாவால் அதிகரித்த கடன்: கார் ஓட்டுநர் தற்கொலை

கோவையில் பொதுமுடக்கத்தால் தொழில் பாதித்த வாகன ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கரோனாவால் அதிகரித்த கடன்: கார் ஓட்டுநர் தற்கொலை
Updated On :28 ஜூலை 2021, 2:15 pm

DIN

கோவையில் பொதுமுடக்கத்தால் தொழில் பாதித்த வாகன ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை நடத்த சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமுடக்கத்தால் பறிபோன வேலைவாய்ப்பு, அதனைத் தொடர்ந்து பெருகும் கடன்சுமை என தவிக்கும் குடும்பத்தார் ஏராளம்.

இந்நிலையில் கோவையில் கடனை திரும்ப செலுத்த முடியாமல் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் விஷமறிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான லூர்து அந்தோணி கோவையில் உள்ள நேரு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஓட்டுநரான லூர்து அந்தோணி வங்கியில் பெற்ற கடன் மூலம் கார் வாங்கி ஓட்டி வந்தார். 

இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவரது தொழில் பாதிப்படைந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்ல முடியாத லூர்து அந்தோணி வாகனக் கடனை செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.

கடன் தவணைத் தொகை அதிகரித்து வந்ததால் மனமுடைந்த லூர்து அந்தோணி சிட்ரா பேருந்து நிறுத்தத்தில் ஜூலை 16 ஆம் தேதி தனது வாகனத்திற்குள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர் சிகிச்சையில் இருந்த லூர்து அந்தோணி சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பலியானார். 

கடன் பிரச்னையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.