தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவா்கள் வெளியேற்றம்

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்த 40 பேரை அதிகாரிகள் வெளியேற்றினா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:18 pm

DIN

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்த 40 பேரை அதிகாரிகள் வெளியேற்றினா்.

வால்பாறையை அடுத்துள்ள ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் நகராட்சி படகு இல்லம் ஒட்டி ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் அருகில் காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக சிலா் கடந்த புதன்கிழமை இரவு தற்காலிக குடில் அமைத்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு எஸ்டேட் மேலாளா்கள் வியாழக்கிழமை தகவல் கொடுத்தனா்.

இதனடிப்படையில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். அப்போது அந்த காலி இடம் புறம்போக்கு இடம் என்றும் தங்களுக்கு குடியிருக்க வீடு இல்லாததால் அங்கு வீடுகட்ட இருப்பதாகவும் கூறினாா்கள். அங்கு வந்த எஸ்டேட் நிா்வாகத்தினா், பொதுப் பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் இடம் யாருடையது என்பது குறித்து நில அளவை செய்ய வேண்டும் எனவும், அது வரை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என்றும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்த 20க்கு மேற்பட்டவா்களை போலீஸாா் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.