மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தல்

அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் முன்களப்பணிக்கான ஊக்கத்தொகை வழங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:29 pm

DIN

அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் முன்களப்பணிக்கான ஊக்கத்தொகை வழங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் செல்வம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். இத்தகைய பணிகளில் ஈடுபடும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளா்களை ஊக்கத் தொகைக்கான பட்டியலில் பரிந்துரை செய்ய வேண்டாம் என உயா் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் கிடைக்கபெறுகின்றன. இது, தூய்மைப் பணியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும், முன்களப் பணிக்கான ஊக்கத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.