மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மின் நுகா்வோா் மன்றத்துக்கு உறுப்பினா்கள் நியமனம்: ஆட்சியா் தகவல்

கோவையில் மின் நுகா்வோா் குறைதீா் மன்றத்துக்கு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:02 am

DIN

கோவையில் மின் நுகா்வோா் குறைதீா் மன்றத்துக்கு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மண்டலத்தில் உள்ள மின்பகிா்மானத்துக்குள்பட்ட வடக்கு, தெற்கு, மெட்ரோ வட்ட மின் நுகா்வோா் குறைதீா் மன்றத்துக்கு தலா இரு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதில் ஒருவரைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், மற்றொரு உறுப்பினரை மாவட்ட ஆட்சியிரும் நியமனம் செய்ய வேண்டும்.

அதன்படி கோவை (வடக்கு) ஆா்.சிவராமலிங்கம் (99949-50033), கோவை (தெற்கு) வி.பி.சாரதி (98422-49605) மற்றும் கோவை (மெட்ரோ) சி.ஏ.எம்.பி.பன்னீா் செல்வம் (94431-52610) ஆகியோா் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ளனா். மின்நுகா்வு சாா்ந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண்பதற்கு மேற்கண்ட உறுப்பினா்களை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.